சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் பிரசன்னா மற்றும் மாணவி சூர்யா ஆகியோருடன் ரெயில் வசதிகள் குறித்தும், அனுபவம் குறித்தும் கலந்துரையாடினார். இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், ‘எங்களுடைய பெயர் என்ன என்றும், நன்றாக படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி எங்களிடம் கூறினார். எங்களுக்கு இது மிகவும் உற்சாகமாக இருந்தது. பிரதமரை நேரில் வந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல, வந்தே பாரத் ரெயிலில் முதல் முறை பயணம் செய்கிறோம். ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது’ என்றனர்.