Take a fresh look at your lifestyle.

ஐபிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

128

சென்னை சேப்பாக்கத்தில் 12 ந் தேதி நடக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்தனர்.

16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ந் தேதி முதல் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 2வது ஐ.பி.எல். ஆட்டம் வருகிற 12ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தின் கவுண்டரிலும், ஆன்லைன் மூலமாகவும் நடந்தது. சி, டி, மற்றும் இ கேலரிகளுக்கான கீழ்தளத்தின் டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இந்த டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.இதுதவிர ரூ.2 ஆயிரம் (ஐ, ஜே, மற்றும் கே கேலரிகளின் மேல்தளம்), ரூ.2500 (ஐ, ஜே மற்றும் கே கேலரிகளின் கீழ்தளம்), ரூ.3000 (டி, இ கேலரிகளின் மேல்தளம்) டிக்கெட்டுகள் விற்பனையானது. ரூ.3 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனையாகின. ரூ.2 ஆயிரம், ரூ.2500 விலையிலான டிக்கெட்டுகள் கவுண்டர் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டது.

டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஒருவருக்கு 2 டிக்கெட் வழங்கப்பட்டது. டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டனர். காலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். டிக்கெட்டுகளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். ரசிகர்கள் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினார்கள்.