Take a fresh look at your lifestyle.

ஏப்ரல் 8–ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை: கோவை வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்

49

-சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட ரூ. 294 கோடி மதிப்பிலான 3 ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 8-ந்தேதி தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்திற்குள் வந்தே பாரத் ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் 2வது வந்தே பாரத் ரெயில் சேவையானது சென்னை கோவை இடையே தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்ரல் 8ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம், திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து, தாம்பரம் செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரெயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த 3 திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ. 294 கோடி ஆகும். சென்னை கோவை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் சேவையானது தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும்.