Take a fresh look at your lifestyle.

அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது

77

சென்னை, தி.நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபர்கைள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1 பெண் மீட்கப்பட்டார்.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, விபச்சார தடுப்புப் பிரிவு -2, காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (10.03.2023) தி.நகர், தணிகாச்சலம் ரோட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4வது மாடியிலுள்ள வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி அழகு நிலையத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஆனந்த் ஶ்ரீவத்சவா, வ/28, த/பெ.அரவிந்த்குமார், முகுந்த்பூர் வடக்கு, மேற்கு டெல்லி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார். மேலும், மேற்படி வழக்கில் தொடர்புடைய ரன்வீர் (எ) முகமது ரபீக் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆனந்த் ஸ்ரீவத்சவா விசாரணைக்குப் பின்னர் நேற்று (10.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 1 பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
*****