நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுய வேலை வாய்ப்புகளை தொடர்ந்து உருவா க்க உறுதிபூண்டுள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு ஆணை களை பிரதமர் வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கிய அவர் காணொலி வாயிலாக பயனாளிடம் அவர் உரையாற்றினார்.
‘‘இன்று பணி நியமன ஆணைகளை பெறுபவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்குகிறது. அரசின் அங்கமாக இருக்கும் நீங்கள், புதிய இந்தியாவில் துடிப்பான செயல் பாட்டாளர்களாக இருப்பீர்கள். வணிக உலகில், ‘நுகர்வோரே சரியானவர்கள்’ என சொல் லப்படுகிறது. அதேபோல், ‘சாமானிய மக்களே எப்போதும் சரியானவர்கள்’ என்பது ஆட்சி யின் முழக்கமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப் புகளை தொடர்ந்து உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். அதனுடன், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கப்படும்’’. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மெகா வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மெகா வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிக அளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்க நினைக்கும் பிரதமரின் எண்ணத்தின் ஒரு பகுதியே இந்தப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியாகும். இந்த மெகா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். நாடு முழுவதிலிருந்தும் இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்காணிப்பாளர்கள், காவல் துறை அதிகாரிகள், மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கு பலரும் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.