Take a fresh look at your lifestyle.

7 நாள் ரெய்டில் 24 வழக்குகள் பதிவு: 73 கிலோ குட்கா பறிமுதல்

71

சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் 73 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை நகரில் கமிஷனர் சங்கர்ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் நடத்துதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அந்தந்த காவல் எல்லைகளில் வாகன சோதனை நடத்தி குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 05.02.2023 முதல் 11.02.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 நபர் களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 73 கிலோ 921 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், 1/2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பிடும் படியாக, மடிப்பாக்கம் போலீசார் கடந்த 09.02.2023 அன்று மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, கலை மகள் தெரு சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த குணசேகரன் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம் உட்பட 71 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.