Take a fresh look at your lifestyle.

19 காவலர் குடும்பங்களுக்கு ரூ. 43 லட்சம் சேமநல நிதி: கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்

37

சென்னை பெருநரில் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 43,70,588-க்கான வரைவோலையை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகி ச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகை யினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 ஆய்வாளர், 1 உதவி ஆய்வாளர், 1 அமைச்சுப்பணியாளர் உட்பட 19 காவல் அதி காரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலருக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) மொத்தம் ரூ.43,70,588/- ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று (20.12.2022) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மேற்படி மருத்துவ சிகிச்சை தொகை ஒதுக்கீடு பெற்ற 19 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகைக்கான வரைவோலையை வழங்கினார். இதில் இறந்து போன ஆயுதப்படை தலைமைக் காவலர் மற்றும் போக்குவரத்து தலைமைக் காவலர் ஆகியோரின் குடும்பத்தினர், ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகைக்கான வரைவோலையினை பெற்றுக் கொண்டனர்.  இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலை மையிடம்) முனைவர் லோகநாதன், இணைக்கமிஷனர் (தலைமையிடம்) சாமூண்டீஸ்வரி மற்றும் காவல் துணை ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.