புனித தோமையர்மலை பகுதியில் விற்பனைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 523 டைடல் டைடால் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவி ரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (20.01.2023) மதி யம் புழுதிவாக்கம், பாலாஜி நகர் 23வது தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக சட்டவிரோதமாக டைடால் உடல் வலி நிவாரண மாத்தி ரைகள் மற்றும் ஊசிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், வீட்டில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக் காக பதுக்கி வைத்திருந்த புழுதிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), கண்ணதாசன் நகர் மகேஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 523 டைடல் (Tydol) உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் மும்பையிலிருந்து டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து சென் னையில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.