Take a fresh look at your lifestyle.

வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா

53

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். இவ்வாற அதில் பாலா தெரிவித்துள்ளார்.