சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த கும்பலை கைது செய்த துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம்
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம் (துணை ஆணையாளர் பொறுப்பு வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம்) புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வானமாமலை, வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யாபாரதியின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் முகமது புஹாரி ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந் 6.03.2022 அன்று, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் மெத்தம்பெடமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த ரோஹித் மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் மொத்தம் 2 கிலோ கஞ்சா மற்றும் 860 கிராம் எடை கொண்ட மெத்தம் பெடமைன் என்ற போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட போதை பொருள் கும்பலை சேர்ந்த 8 நபர்களை கைது செய்த துணை ஆணையாளர் சுந்தரவதனம் மற்றும் வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யாபாரதி தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் முகமது புஹாரி, விஜய், காதர் மீரா, செல்வகுமார்,
தலைமைக்காவலர்கள் கிருஷ்ணன், முகமது யஹ்யா, மனுவேல், சரவணன், அசோக், ஷோபா, முதல் நிலைக்காவலர்கள் பாலமுரளி, சதாசிவம், செந்தில்குமார், முகமது காட்டுபாவா,
முத்துக்குமரன் ஊர்காவல் படை வீரர் சரத் ஆகியோரை கமிஷனர் நேரில் அழைத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.