முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (20 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 202 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய் வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டி டங்களை திறந்து வைத்தார்.
சென்னை -மாநிலக் கல்லூரியில் 8 கோடியே 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்; சென்னை -பாரதி மக ளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடு தல் வகுப்பறைக் கட்டடங்கள்; சென்னை -இராணிமேரி கல்லூரியில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறை தொகுதி கட்ட டங்கள்;
சென்னை- ஆர்.கே.நகர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 3 கழிவறை கட்டடங்கள்; வியாசர்பாடி -டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கம்;
திருவள்ளுர் மாவட்டம் செவ்வாய்பேட்டை, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம்; பொன்னேரி -உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 36 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் 6 கழிவறை தொகுதி கட்டடங்கள்;
விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்; திரு வண்ணாமலை மாவட்டம்- செய்யாறு, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு நூலகக் கட்டடம்;
வேலூர், தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 ஆசிரியர் அறை மற்றும் 1 கழிவறை கட்டடம்; சேர்க்காடு – திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்கள்;
திருப்பூர் மாவட்டம், காங்கேயம்- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 30 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் கழிவறை கட்டடம்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம், 2 பணியாளர் அறைகள் மற்றும் 2 கழிவறை கட்டடங்கள்; திருப்பூர் -எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் 6 கழிவறை கட்டடங்கள்; உடுமலைப்பேட்டை -அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்;
கோயம்புத்தூர் – அரசு கலைக் கல்லூரியில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 வகுப்பறைகள் மற்றும் 6 கழிவறை கட்டடங்கள்; நீலகிரி மாவட்டம், உதகமண்டலம்-அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 2 கழிவறை கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 வகுப்பறைகள் மற்றும் 4 கழிவறை கட்டடங்கள்;
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன் வளர்ச்சி, தொழில் முனைவோர் மற்றும் அடைக்காப்பு மையம் ஆகியவற்றிற்கான கூடுதல் விரிவாக்க கட்டடங்கள்; ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்;
நாமக்கல் மாவட்டம், மோகனூர் -அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 20 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம்; ராசிபுரம் -திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;
கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி -அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வகக் கட்டடங்கள்; குளித்தலை- அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்;
புதுக்கோட்டை – மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 வகுப்பறைகள், 1 நவீன வகுப்பறை மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; கடலூர் – பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 6 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;
திருவாரூர் – திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; மன்னார்குடி -மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;
மற்றும் தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள், விடுதிகள் என மொத்தம் 202 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை சார்ந்த கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் க.லட்சுமிபிரியா, உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் எஸ். பழனிசாமி, கல்லூரி கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.