Take a fresh look at your lifestyle.

மெட்ரோ ரெயில் திடீர் கோளாறால் பயணிகள் அவதி

39

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக் கப்பட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டதால் ரெயில் சேவை வழக்கம் போல் செயல் பட்டது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயிலில் சேவை தற்போது இயங்கி வருகிறது. அலுவலகங்களுக்கு செல்வோர் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் இயக்குவதில் சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட்டது. சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் 6 நிமிட இடைவெளியிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 6 நிமிட இடை வெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை 45 நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். காலையில் அலுவலகத்துக்கு செல்லக்கூடியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கிடையே தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சேவை தொடங்கியது.