மு.க.ஸ்டாலினை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, முத்துசாமி, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, அசன் மெளலானா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.