மாலத்தீவு தலைநகர் மாலேயில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 12 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் சிலர் தீ விபத்தில் சிக்கினர். இதில் 10 பேர் உயிரி ழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளது. மாலத் தீவின் தேசிய மேலாண்மை ஆணையம் தரப்பில், ‘தீ விபத்தில் பாதிக்கப் பட்டவர் களுக்கு நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக’ கூறப்பட்டது. ஆனால், அவர்கள் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை’. இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலர் தமிழர்கள் என கூறப்படுகிறது. 4 மணிநேரம் போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. மாடியில் 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் 9 பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஒருவர் பங்களாதேஷ்காரர் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.