Take a fresh look at your lifestyle.

மயக்க மருந்து கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 பேர் கூண்டோடு கைது

113

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு மயக்க பொருள் கொடுத்து பாலியல் உறவு கொண்ட நபர் மற்றும் இவரது நண்பர்கள் என மொத்தம் 4 நபர்கள் போக்சோ சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிறுமியின் பெற்றோர் சிறுமியை விசாரணை செய்தபோது, சமூக வலைதளத்தில் அறிமுகமான வசந்த் கிரிஷ் என்பவர் காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று மயக்க பொருளை உட்கொள்ள வைத்து, பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் மீண்டும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் உறவு கொண்டதாகவும் சிறுமி தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தாய் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பல் மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த்கிரிஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் வசந்த்கிரிஷ் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்துச் சென்று மயக்க பொருளை உட்கொள்ள வைத்து பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்தது. இது போல பலமுறை நடந்து கொண்ட நிலையில், வசந்த்கிரிஷ் அவரது நண்பர்கள், பாலசிவாஜி (எ) ரஞ்சித், விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடனும் சிறுமியை பாலியல் உறவு கொள்ள வைத்து சுமார் 1 மாத காலம் சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குமரியைச் சேர்ந்த வசந்த்கிரிஷ் (20), விருதுநகரைச் சேர்ந்த பாலசிவாஜி (எ) ரஞ்சித் (25), சென்னை கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விஷால் (20), நங்கநல்லூர் பிரசன்னா (32) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் யாரேனும் தொடர்பில் உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (28.02.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.