Take a fresh look at your lifestyle.

போலீஸ் மோப்ப நாய் டோனி உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

72

ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் மோப்பநாய் டோனி இருதய கோளாறு இன்று உயிரிழந்தது. 21 குண்டுகள் முழங்க மோப்ப நாய்க்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை ஆவடி காவல் ஆணையரக மோப்பநாய் பிரிவில் டாபர்மேன் இனத்தைச் சேர்ந்த டோனி என்ற மோப்ப நாய் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றியது. சென்னை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவின் மூத்த நாயான டோனி, சென்னையில் இருந்து பிரிந்து கடந்த மே மாதம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்ந்தது. கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.

மேலும் 2017 ஆம் ஆண்டில் மாநில அளவில் காவல் துறையில் திறன் போட்டியில் பங்கேற்று டோனி வெள்ளிப் பதக்கமும், 2020ம் ஆண்டு, சென்னை அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப் மீட்டில் இரண்டாம் 2வது இடத்தைப் பெற்றது. கடந்த சில நாட்களாக இருதய கோளாறு காரணமாக டோனி சிகிச்சையில் இருந்த டோனி நேற்று உயிரிழந்தது. அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் டோனியின் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்து நன்றி தெரிவி த்தார். ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள் மற்றும் டோனியின் பயிற்சியாளர் தலைமைக் காவலர் தனசேகர் டோனிக்கு மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். இறந்த டோனியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.