சென்னைப் பெருநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூ. 48 லட்சத்து 59 ஆயிரம் அபராதமாக வசூல் செய்து 16 ஆயிரம் வழக்குகளை போக்கு வரத்து போலீசார் முடித்து வைத்துள்ளனர்.
சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தர வின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற் பார்வையில் சாலை விபத்துக்களை குறை க்கும் நோக்கில், மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல் படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற் கொள்வதன் மூலம் சாலை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சராசரியாக ஒரு நாளைக்கு 6 ஆயிரம் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள், சரியான நேரத்தில் அபராத தொகையை செலுத்துவதில்லை. அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனாலும் பலர் அபராத தொகை யை செலுத்தாமல் இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 12ம் தேதி முதல் சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் விதிமீறிய 1,022 பேரிடம் அபராத தொகையாக சுமார் ரூ. 11 லட்சத்து 28 ஆயிரத்து 810- வசூலிக்கப்பட்டு 1,615 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்கும் பொருட்டு, கடந்த 19 மற்றும் 20ம் ஆகிய 2 தினங்களில் சென்னை நகரின் முக்கிய சாலைகளில் 168 இடங்களில் ஒரு எல்லைக்கு 3 இடங்கள் வீதம் சிறப்பு வாகன சோதனை சாவடிகள் நிறுவப் பட்டன. இந்த சிறப்பு முகாமில் கடன் அட்டை, கியூஆர் குறியீடு மற்றும் இணைய தளக் கட்டணம் ஆகியவை மூலம் 4,083 வாகன ஓட்டிகளிடம் ரூ. 48,59,300- வசூலிக்கப்பட்டு 16,072 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.