Take a fresh look at your lifestyle.

நன்னடத்தை விதிமுறையை மீறிய ரவுடிக்கு 362 நாள் சிறை: மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் உத்தரவு

dcp disha mittal ordered gangster remanded in jail 362 days

86

மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை 362 நாட்கள் சிறையிலடைத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த ஹரிஷ், 20, ஐஸ்அவுஸ் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 4 கொலை முயற்சி உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஹரிஷ், கடந்த 19.05.2022 அன்று மயிலாப்பூர் துணை ஆணையாளர் திஷா மிட்டல் முன்பு முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், ஹரிஷ் கடந்த 22.05.2022 அன்று பி.பி.நாயக்கன் தெரு, மாதா கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கோட்டீஸ்வரராவ் என்பவரை வழிமறித்து மிரட்டி ரூ.500- பறித்துச் சென்றது தொடர்பாக ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது ய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

ஹரிஷ் 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக, செயல்முறை நடுவராகிய மயிலாப்பூர் துணை ஆணையாளர் திஷா மிட்டல் ஹரிஷை கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 362 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து இன்று (20.06.2022) உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றவாளி ஹரிஷ் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.