Take a fresh look at your lifestyle.

தெலுங்கானாவில் தனியார் பயிற்சி ஹெலிகாப்டர் விபத்து: தமிழக பயிற்சி விமானி உட்பட இருவர் பலி

91

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயிற்சியாளர் உட்பட 2 விமானிகள் உயிரிழந்தனர்.

ஐதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா 152 என்ற பயிற்சி ஹெலிகாப்டர் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லாவில் இருந்து இன்று காலையில் புறப்பட்டது. கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் அணைக்கு அருகில் உள்ள பெத்தவுராவின் துங்கதுர்த்தி கிராமம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி நிலத்தில் விழுந்துள்ளது. டமார் என்ற பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இந்த விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகிமா என்ற பயிற்சி விமானி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.