சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் தெருவில் கண்டெடுத்த ரூ. 7,705- பணம் அடங்கிய மணிபர்சை ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5ம் வகுப்பு மாணவிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் அவர்களை எழும்பூரிலுள்ள காவல் அருங்காட்சியகம் அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கும்படி கமிஷனர் உத்தவிட்டார். அதன்பேரில் அவரை காவல்துறையினர்
எழும்பூர் மியூசியத்தை சுற்றிக்காட்டினார்கள். இதனால் சிறுமிகள் மகிழ்ச்சியடைந்தனர்.