Take a fresh look at your lifestyle.

திருமணம் நிச்சயமான நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் கவலைக்கிடம்

74

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு தலைவரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டியின் மகளுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் அடுத்த மாதம் ஜனவரி 26ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்தது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் திருமணத்தை நடத்தி வைப்பதாக இருந்தது. அதனால் திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தன. இந்த நிலையில் சந்திரமவுலி ரெட்டிக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவேரி ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அந்த மருத்துவக் குறிப்பில் பதாவது:- ‘‘கடந்த 18-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சந்திரமவுலி ரெட்டி, காவேரி ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் ‘ஸ்டண்ட்’ கருவி பொருத்தப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். அவரை ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இக்கட்டான இந்த சூழலில் எங்களது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் மணமகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இருவீட்டாருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.