தி.மு.க சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார்.
சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்த போது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்து வமனையில் சேர்த்த பொழுது சிகிச்சை பலனின்றி, உயிரிழந்ததாக தெரிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் மஸ்தான் மரண வழக்கில் திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் தெரிவி த்துள்ளது. மஸ்தானின் தம்பியின் மருமகன் இம்ரான் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் திட்டம் தீட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் மாவட்ட காவல் துணை ஆணையாளர் சிபி சக்ரவர்த்தி தலைமையில் கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆணையாளர் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படையினரின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மீது சந்தேகம் இருப்பதாக தெரிய வந்ததாலும், அவருடைய பேச்சில் முரண்பாடு இருந் ததாலும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் வாக்குமூலத்திலும் டாக்டர் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என தெரிவித்ததாலும் இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மாஸ்தான் தனது வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தத லிருந்தும் தொலைப்பேசி உரையாடல்களை கண்காணித்ததிலும் இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யானவை என்று தெரிந்தது. சம்பவ தினத்தன்று டாக்டர் மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.
எனவே இம்ரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற் கொண்டதில் இம்ரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தவுபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். இம்ரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மாஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும் மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்தி கொண்டு நம்ப வைத்து அவரிடமிருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றதாகவும் அதனை திரும்ப கேட்டு டாக்டர் மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்த திட்டம் தீட்டி பைனான்சியரிடம் பணம் பெற போவதாக கூறி நம்ப வைத்து டாக்டர் மஸ்தானை அழைத்து கொண்டு சென்றுள்ளனர்.
அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும் தமீம் (எ) சுல்தான், மற்றும் நஷீர் ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு காரில் பின் தொடர்ந்து வர சொல்லி விட்டு செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின் பின் சீட்டில் உட்காரிந்திருந்த நஷீர் டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து பிடித்து கொள்ள சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்தி பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும் பின்னால் காரில் வந்த தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்து மற்ற எதிரிகளை அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும் பின்னர் டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்து விட்டதாக மற்றவர்களை வைத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.