Take a fresh look at your lifestyle.

திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் கைது

41

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப் பட்ட நிலையில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது சகோதரரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த 21.12.2022 அன்று தனது காரில் உறவினர் இம்ரான் பாஷா என்பவருடன் காரில் செங்கல்பட்டு நோக்கி சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மஸ்தானின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் இயற்கைக்கு மாறாக இறந்தது தெரியவந்தது. இந்நிலையில் தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மஸ்தானின் மகன் ஷாநவாஸ் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் உதவிக்கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மீது சந்தேகம் ஏற்பட்டது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கையின்படி டாக்டர் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தான் அவருடைய வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததிலும். இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யானவை என்று தெரிந்தது. சம்பவ தினத்தன்று டாக்டர் மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து வந்துள்ளனர். எனவே இம்ரான் போலீசார் இம்ரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இம்ரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தவுபிக் அகமது, லோகேஷ்வரன், சதிஷ் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இம்ரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு நம்ப வைத்து அவரிடம் இருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அதனைத் திருப்ப கேட்டு டாக்டர் மஸ்தான் இம்ரானிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர் தௌபிக் அகமது, லோககேஷ்வரன் ஆகியயோருடன் சேர்ந்து திட்டம் திட்டி பைனானசியரிடம் பணம் பெறப் போவதாக கூறி நம்ப வைத்து டாக்டர் மஸ்தானை தங்களுடன் காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும். தமீம் (எ) சுல்தான் மற்றும் நனீர் ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தொபிக் அகது மற்றும் கோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு காரில் பின் தொடர்ந்து வரச் சொல்லியுள்ளார். பின்பு செங்கல்பட்டு அழைத்துச் சென்று ஒரு தனி இடத்தில் காரை நிறுத்தி காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த தனீர் டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து இழுத்து பிடித்துக் கொள்ள கல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்தி பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். பின்பு டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தது விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்ததாக இம்ரான் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். அதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய
இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்து பார்த்த போது டாக்டர் மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா அவருடைய தொலைபேசியில் இருந்து அவருடைய மாமனார் ஆதாம் பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது.

மேலும் கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி ஆதாம்பாஷாவிற்கும் அவர்களுடைய குடும்ப சொத்தான வீடு சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு மஸ்தான் ஆதாம்பாஷாவை ஆஸ்பத்திரிக்கு சென்று சத்தம் போட்டது விசாரணையில் தெரிந்ததால். இதனால் கொலை செய்யப்பட்ட மஸ்தானின் தம்பி ஆதாம்பாஷாவிற்கு கொலையில் தொடர்பு இருக்க வாய்புள்ளதாக சந்தேகம் இருந்தது. இதனால் போலீசார் ஏற்கனவே கைதான இம்ரான்பாஷா, தமீம் (எ) சுல்தான் அகமது, நஷீர், ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஸ்தான், இம்ரான் பாஷாவின் மாமனாரும், மஸ்தானுக்கு தமபியுமான ஆதாம்பாஷாவிற்கு கொடுத்த கடன் ரூபாய் 5 லட்சத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாலும், அவர்களது குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனாருக்கு எழுதி கொடுக்க தடையாக இருந்ததாலும், தனது மாமனாருடன் சேர்ந்து மஸ்தான் அவர்களை கொலை செய்ய திட்டம் போட்டு அதன்படி மஸ்தான் அவர்களுடன் நெருங்கி பழகி அவரை வெளியே காரில் அழைத்து சென்று தனது உறவினர் சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் 12.01.2023 காலை இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட 6 வது எதிரி ஆதாம்பாஷாவை கைது செய்து விசாரணை செய்ய அவரும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து, கௌசேஆதாம்பாஷவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.