Take a fresh look at your lifestyle.

டோல்கேட் ஊழியர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: திருமாவளவன் பேட்டி

49

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு பணிபுரிந்த 28 ஊழியர்களை தனியார் ஒப்பந்த நிறுவனம், எவ்வித முன்னறி விப்புமின்றி பணி நீக்கம் செய்தது. ஆள் குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இரவு பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பணியின்றி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளர்களை மீண்டும் நிரந்தரமாக பணியமர்த்தக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சங்க கிளை தலைவர் ஏ.ஆர் மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக புகார்கள் எழுந்ததால் அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அகிம்சை முறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஊழியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரக்கூடாது, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுங்கச்சாவடி ஊழியர்களை எம்பி திருமாவளவன் எம்.பி. அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரி வித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,- ‘‘பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி ஊழியா்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். இந்த பிரச்னைக்கு தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை, மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். டோல்கேட் ஊழியர்கள் பணி நீக்க பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்பட வில்லை என்றால், அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும்’’. இவ்வாறு அவர் பேசினார்.