சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் சாதுர்யமான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தோஹா புறப்பட்ட கத்தார் ஏர்வேல் விமானம் வானில் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த விமானி தகுந்த நேரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து விமானத்தை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து விமான பராமரிப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விமானயின் துரித நடவடிக்கையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அந்த விமானத்தில் பயணம் செய்த 7 விமான ஊழியர்கள் உள்பட 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.