Take a fresh look at your lifestyle.

குட்கா, கஞ்சா ரெய்டில் முனைப்பு காட்டிய காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் பாராட்டு

commissioner shankar jiwal ips rewarded good work done officers

89

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

  • ராஜமங்கலம் 527 கிலோ குட்கா பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணன், தலைமைக் காவலர்கள் வெங்கடேசன், சரவணகுமார், முதல் நிலைக்காவலர் மினர், ஊர்க்காவல் படை சுகுமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 26.05.2022 அன்று ராஜமங்கலம் பகுதியில் குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த மாரிச்செல்வம், முருகன், அந்தோணி பாஸ்கர், குமார், கார்த்திக், சுகுமார் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 527 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள், 2 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • வியாசர்பாடியில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

வியாசர்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர்கள் ஜெயன், ஆனந்தராஜ், பிரபு ஆகிய மூவரும் கடந்த 30.04.2022 அன்று வியாசர்பாடி, பிபி ரோடு சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்த போது, ஆட்டோவில் வந்த 2 நபர்களும் முன்னுக்குப்பின்முரணாக பதில் கூறினர் சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை சோதனை செய்த போது, ஆட்டோவில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் மோகன், கார்த்திக் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

  • வியாசர்பாடி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.செம்பியம் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் குமரவேல், ஊர்க்காவல் படை வீரர் அல்பிரட் ஜான் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 11.06.2022 அன்று வியாசர்பாடி, பி.வி.காலனி, 2வது தெருவில் கண்காணித்து அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரமா (எ) அறுப்பு ரமா வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்தும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ மற்றும் ரூ.1,12,700- பறிமுதல் செய்து P-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  • ஆர்.கே.நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை ஆட்டோவில் ஏற்றிய நபர்கள் கைது. 1,000 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல்.ஆர்.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவீன்குமார், தலைமைக்காவலர்கள் வெங்கடேசன், மணிகண்டன், முதல் நிலைக்காவலர்கள் தமிழ்வாணன், பிரதீப்குமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 18.05.2022 அன்று மதியம், எழில்நகர், சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 5 நபர்கள் ஓரு ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது அருகில் சென்று விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், ஆட்டோவில் ஏற்றிய மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த பாடி மணிகண்டன், தங்கபாண்டி, பாண்டியன் (எ) தங்கபாண்டியன், ராமர் களஞ்சியம், சபாபதி ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1,000 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல், ரெமோ, ஸ்வாகத், எம்,டி.எம், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

சிறப்பாக பணிபுரிந்த மேற்படி 15 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.