செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பட கூடிய சமூக ஆபத்துகளை பற்றி எச்சரிக்கும் வகையில், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் வலைதளத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். சுமார் 56 வினாடி ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் அவர் உருவாக்கிய வீடியோவை ஓட செய்கிறார். அதில், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் அவர் பேசி கொண்டி ருக்கிறார். ஆனால், அவரின் அசைவுகள், செய்கைகள் போன்றே அதே வீடியோவின் மற்றொரு பகுதியில் இன்னொரு நபர் தோன்றுகிறார். அந்த நபர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், ஷாருக் கான் ஆகியோரை போன்ற முக அமைப்புகளை கொண்டு, அடுத்தடுத்து மாறி கொண்டிரு க்கிறது.
இதனால், பல்வேறு நபர்களின் முக அமைப்புகளை மார்பிங் செய்து, போலி வீடியோவை தயாரித்து சமூகத்தில் பரவ விட முடியும் என்று எச்சரிக்கை தரும் வகையில் வீடியோ அமைந்து உள்ளது. இதுபற்றி ஆனந்த் மகிந்திரா கூறும்போது, ‘‘இந்த வீடியோ வானது ஒரு புறம் நம்மை மகிழ்விக்க கூடிய வகையில் இந்த வீடியோ அமைந்தபோதிலும், ஏமாற்றக் கூடிய விஷ யங்களை வழங்குவதில் இருந்து, நாம் இந்த சமூகத்தில் நம்மை பாதுகாத்து கொள்ள எப்படி தயாராக இருக்கிறோம்? என்பதும் கவனத்தில் கொள்வதற்குரிய விசயம் ஆகும். இவற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளும் வகையில், முன்னேற் பாடான விசயங்கள் எதுவும் உண்டா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தொழில் நுட்பம் உதவியால் பல துறை பிரபலங்களின் முக அமைப்புகளை போன்று மார்பிங் செய்து, அவர்கள் கூறுவது போன்ற விசயங்களை பரவ செய்ய கூடிய ஆபத்து சுட்டி காட்டப்பட்டு உள்ளது’’. என தெரிவித்துள்ளார்.