சென்னை, பூக்கடை காவல் நிலையமானது 1876ம் ஆண்டு மதராஸ் பட்டனமாக இருந்தபோதே துவங்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த காவல் நிலையம் ஆகும். பின்னர் 2006ம் ஆண்டு இக்காவல் நிலையத்திற்கு புதுக்கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது ISO தரசான்றிதழ் பெறும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. காவல் நிலையம் சிகப்பு நிற வண்ணத்தில் இருந்து தூய்மையான வெண்மை நிறமாக மாற்றம் செய்யப்பட்டது. காவல் நிலையத்தின் முகப்பில் Digital மின் விளக்குடன் கூடிய பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு குற்றம் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் எண்ணத்துடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களும் , காவல் கரங்கள் செயல்பாடுகள் தொடர்பான குறும்படங்களும் காவல் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள LED அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் கணினி வழிக்குற்றங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் பொதுமக்களை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு காவல் நிலைய வளாகத்தில் பசுமை தோட்ட பூங்கா அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
காவல் நிலையத்தின் வரவேற்பு அறையானது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ஒரு பெண்காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டு புகார்தாரர்களை அமரவைத்து கணிவுடனும் மனித நேயத்துடனும் குறைகளை கேட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. காவல் நிலையத்தின் உட்புறம் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், எழுத்தர் அறைகள், மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் அறைகள் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் மெச்சத்தக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய வளாகம் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்க வசதியாக காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்களுக்காக ஒரு அறை தயார் செய்யப்பட்டு அமர்வதற்கான உரிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் தொடர்பான புகார்தாரர்கள் வரும்போது அவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு அவர்களுடைய குறைகளை பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கனிவுடன் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கும் எண்ணத்துடன் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்ககூடிய Solar Plant அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை ஆளிநர்கள் வாகனங்களை தனித்தனியாக நிறுத்துவதற்கு போதிய வாகனம் நிறுத்தும் (Parking) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தூய்மையாக வைக்கப்பட்டு, அனைத்து ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலைய காவலர்களுக்கு பணி தொடர்பாகவும் பொதுமக்களிடம் பணிவுடனும், மனிதநேயத்துடன் நடந்து கொள்ள அறிவுரைகளும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுரைப்படி காவலர்களுக்கு வார ஓய்வும், உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஓய்வும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய தர கவுன்சில் – இந்திய அரசாங்கத்தால் (QCI-GOI) பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டிற்காக, C-1 பூக்கடை காவல் நிலையத்திற்கு சர்வதே தர கட்டுப்பாட்டுச் சான்றிதழான ISO 9001 : 2015 வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள், சோலார் பேனல்கள், வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை. LED போர்டு & கட்டிட பராமரிப்பு போன்ற உள்கட்டமைப்பு கூறுகளை பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும், வசதியாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேர்மறையான சுற்றுச் சூழலை அளிக்க, இயற்கை சூழல் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையப் பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. செயல்முறை மற்றும் உள்கட்டமைப்பு கூறுகள் ஆகிய இரண்டிலும் தரநிலைகளின் தேவைகளை மேற்படி காவல் நிலையம் பூர்த்தி செய்துள்ளது.
எனவே Quest Certification Private Limited என்ற அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்பு, C-1 பூக்கடை காவல் நிலையத்தை வெவ்வேறு நிலைகளில் தணிக்கை செய்து சரிபார்த்து, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மற்ற அனைத்து காவல் நிலையங்களுக்கும், C-1 பூக்கடை காவல் நிலையம் ஒரு முன்மாதிரியான காவல் நிலையமாக இருந்து, மேற்படி தர சான்றிதழை இந்திய அரசின் முகமையிடமிருந்து பெறுகிறது.
இன்று (16.11.2022) மாலை C-1 பூக்கடை காவல் நிலைய, வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் Quest Certification Private Ltd CEO கார்த்திகேயன் அவர்கள் C-1 பூக்கடை காவல் நிலையத்திற்கான ISO 9001: 2015 தர சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) அன்பு, இணைக்கமிஷனர் ரம்யா பாரதி, பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஆல்பர்ட் ஜான் காவல் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.