தமிழகத்தில் இ -அலுவலக மேலாண்மையை (Office Automation) சிறப்பாக கையாண்டதற்காக கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இ அலுவலக மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்துக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.