Take a fresh look at your lifestyle.

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

75

இந்த ஆண்டில் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 16.-11.-2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உள்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுவுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப் படுத்தப் படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ் வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்திய தரப்பில் இருந்து பலமுறை வேண்டு கோள் விடுக்கப்பட்ட பின்னரும் 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது. தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர் களையும், அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ’’ இவ்வாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.